பயங்கரவாத தடுப்பு
படை சேர்க்கை வயதில்
தளர்வு
நாட்டின்
மிகப்பெரிய துணை ராணுவப்படையான CRPF எனப்படும் மத்திய
ரிசர்வ் போலீஸ் படையில்,
நக்சல்களுக்கு எதிராக
‘கோப்ரா‘ சிறப்பு படை
செயல்படுகிறது. இதற்கான
வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சேர்க்கை தனிப்பட்ட முறையில்
நடக்கிறது. ஆனால், இப்போது
இருக்கும் வயது வரம்பால்
இப்பிரிவில் சேருவோர் எண்ணிக்கை
குறைவாக உள்ளது.
அதை
ஈடுசெய்து, அதிக எண்ணிக்கையில் வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சேர்க்க வயது வரம்பில்
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து CRPF அதிகாரிகள் கூறியதாவது:கோப்ரா சிறப்பு
படையில் உதவி கமாண்டன்ட் அதிகாரியாக சேர, 2019க்கு
முன் 30 ஆண்டுகள் அதிகபட்ச
வயதாக இருந்தது.
தற்போது
அந்த வயது 40 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது.துணை
கமாண்டன்ட் அதிகாரியாக சேர
வயது வரம்பு 38.ல்
இருந்து 43.ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. 48 வயது வரையிலானவர்கள் கமாண்டன்ட் ஆக சேரலாம்.