HomeBlogதமிழகத்தின் புதிய மருத்துவ கல்லூரிகளில் பணியாளர்கள் நியமனம்–அவுட்சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு
- Advertisment -

தமிழகத்தின் புதிய மருத்துவ கல்லூரிகளில் பணியாளர்கள் நியமனம்–அவுட்சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு

 

Recruitment of staff in new medical colleges in Tamil Nadu - Opposition to outsourcing system

தமிழகத்தின் புதிய
மருத்துவ கல்லூரிகளில் பணியாளர்கள் நியமனம்அவுட்சோர்சிங் முறைக்கு
எதிர்ப்பு

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 11 அரசு
மருத்துவ கல்லூரிகளில் காலியாக
உள்ள ஆய்வக நுட்பனர்
பணியிடங்களை நிரப்ப அவுட்சோர்சிங் முறைக்கு தமிழ்நாடு பட்டதாரி
ஆய்வக வல்லுநர் சங்கம்
எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் உட்பட 11 மாவட்டங்களில் புதிதாக
அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த
மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் பணிபுரிய
நிர்வாக ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக
நுட்பனர்கள், மற்றும் துப்புரவு
ஊழியர்கள் ஆகியோர் தேர்வு
செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதில்
ஆய்வக நுட்பனர்கள் மற்றும்
துப்புரவு பணியாளர்கள் பணிகளுக்கு அவுட்சோர்சிங் மூலமாக
ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு
தமிழ்நாடு பட்டதாரி ஆய்வக
வல்லுநர் சங்கம் எதிர்ப்பு
தெரிவித்துள்ளது.

மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: நாங்கள்
தான் டாக்டரின் முதுகெலும்பு. நாங்கள் நோயாளிகளுக்கான 200 வகையான
பரிசோதனைகளை செய்கிறோம். நோய்களை
கண்டுபிடிப்பதே நாங்கள்
தான். ஆனால் எங்களுக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு தொடர்பு இல்லை.
இதனை சாதகமாக பயன்படுத்தி புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனைகளில் காலியாக உள்ள
490
ஆய்வக நுட்பனர் பணியிடங்களுக்கு தனியார் மூலமாக எடுப்பது
தவறான செயலாக உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் குறைந்த
சம்பளத்திற்கு பணியாற்றும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட
பணியாளர்களின் அரசு
வேலை கனவாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -