வேலைவாய்ப்புப் பதிவை
புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறுவாய்ப்பு
வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட
ஆட்சியா் தெரிவித்தார்.
இது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை
சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி
வழிகாட்டும் மைய அலுவலகத்தில் பதிவு செய்து 2014 முதல்
2019-ஆம் ஆண்டுகளில் (01.01.2014 முதல்
31.12.2019 வரை) பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ள தமிழக அரசு
ஆணை வழங்கியுள்ளது.
எனவே,
இந்த அரசாணை வெளியீட்டு நாளான டிச.2 முதல்
மூன்று மாதங்களுக்குள், அதாவது
மார்ச் 1-ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறையின் இணையதள
முகவரியைப் பயன்படுத்தி, பதிவுதாரா்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையதளம்
வாயிலாக பதிவை புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள், குறிப்பிடப்பட்ட தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல்
மூலம் விண்ணப்பம் அளித்தும்
புதுப்பித்துக் கொள்ளலாம்.