HomeBlogவேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறுவாய்ப்பு
- Advertisment -

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறுவாய்ப்பு

Re-employment for those who fail to renew their employment record

வேலைவாய்ப்புப் பதிவை
புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறுவாய்ப்பு

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட
ஆட்சியா் தெரிவித்தார்.

இது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை
சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி
வழிகாட்டும் மைய அலுவலகத்தில் பதிவு செய்து 2014 முதல்
2019-
ஆம் ஆண்டுகளில் (01.01.2014 முதல்
31.12.2019
வரை) பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ள தமிழக அரசு
ஆணை வழங்கியுள்ளது.

எனவே,
இந்த அரசாணை வெளியீட்டு நாளான டிச.2 முதல்
மூன்று மாதங்களுக்குள், அதாவது
மார்ச் 1-ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறையின் இணையதள
முகவரியைப் பயன்படுத்தி, பதிவுதாரா்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையதளம்
வாயிலாக பதிவை புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள், குறிப்பிடப்பட்ட தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல்
மூலம் விண்ணப்பம் அளித்தும்
புதுப்பித்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -