TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழக ரேஷன் கடை பணி: நேர்முகத்தேர்விற்கு
ஆவணங்கள்
கட்டாயம்
தமிழக ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள்
குறித்த
அறிவிப்பு
கடந்த
அக்டோபர்
மாதம்
வெளியானது.
இப்பணிக்கு
10 மற்றும்
12ம்
வகுப்பு
முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்
என்று
கூட்டுறவுத்
துறை
சார்பில்
தெரிவிக்கப்பட்டது.
மேலும் வயது வரம்பு 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் இதில் SC /ST பிரிவினர்களுக்கு
மட்டும்
சலுகைகள்
வழங்கப்படும்
என்று
தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விருப்பமுடையவர்கள்
அந்தந்த
மாவட்ட
இணையதளம்
வாயிலாக
நவம்பர்
14 ஆம்
தேதி
வரை
விண்ணப்பித்து
வந்தனர்.
அதன்
தொடர்ச்சியாக
நவம்பர்
30ம்
தேதி
விண்ணப்பித்தவர்களுக்கான
நேர்காணல்
அழைப்பு
கடிதம்
இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
அதன்படி தற்போது வேலூர் மாவட்ட ரேஷன் கடைகள் உள்ள 135 விற்பனையாளர்
மற்றும்
33 கட்டுநர்கள்
என
மொத்தமுள்ள
168 காலிப்பணியிடங்களை
நிரப்புவதற்கான
நேர்முகத்
தேர்வு
வரும்
14ம்
தேதி
துவங்க
உள்ளது.
இந்த நேர்முகத் தேர்வானது அடுக்கம் பாறையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா
பாலிடெக்னிக்
கல்லூரியில்
டிச.14
முதல்
27ம்
தேதி
வரை
நடைபெறும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கு பெற வரும் மாற்றுத்திறனாளிகள்
அரசால்
வழங்கப்பட்ட
பதிவு
புத்தகம்,
மருத்துவரால்
வழங்கப்பட்ட
மருத்துவ
சான்றிதழ்
மற்றும்
அடையாள
அட்டை
ஆகியவற்றை
கட்டாயம்
எடுத்து
வர
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


