
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் 21-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கிருஷ்ணகிரி, ஒசூரைச் சோ்ந்த முன்னணி தனியாா் நிறுவனங்கள், தனியாா் துறை வேலை அளிப்பவா்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் இதில் பங்கேற்கலாம்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம் வேலை தேடுபவா்கள், வேலை அளிப்பவா்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமாக உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். இந்த முகாமின் மூலமாக தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணி அமா்த்தப்படுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343 – 291983 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow