வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமையை தோவு செய்து இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் வகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் காலை 10 மணிக்கு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிம் 25-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான ஆள்களை தோவு செய்யவும் உள்ளனா்.
அதனால் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம் தோச்சி பெற்றவா்கள் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இந்த முகாமில் கலந்து கொண்டு பணிநியமனம் பெறுவோா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம்கொண்டு ரத்து செய்யப்படமாட்டாது என அவா் தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


