HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்விழுப்புரம் மாவட்டத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்!
- Advertisment -

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அக். 5-ம் தேதி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கும் முகாமில் 18 வயது முதல் 40 வயது வரையிலான வேலை தேடுவோர் கலந்து கொள்ளலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, பொறியியல், ஐடிஐ, டிப்ளாமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வேலைநாடுநர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் தகுதிக்கு ஏற்ற சிறந்த ஊதியத்தில் பணி நியமன ஆணையை பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 94990 55906, 90805 15682, 70108 27725 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம். ‘www.tnprivatejobs.tn.gov.in‘ என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -