TNPSC., தேர்வு
தள்ளிவைப்பு
இன்று
முதல் நவ.13ம்
தேதி வரை, TNPSC.,
நடத்தவிருந்த துறை
தேர்வுகள், கனமழை எச்சரிக்கையால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான TNPSC.ன் தேர்வு கட்டுப்பாட்டு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை,
திருவள்ளூர், வேலுார், கிருஷ்ணகிரி, கோவை, மதுரை மற்றும்
நாகர்கோவில் மையங்களில், இன்று
முதல் 17ம் தேதி
வரை, துறை தேர்வர்களுக்கு இரண்டு மற்றும் மூன்றாம்
நிலை மொழிகளுக்கான நேர்முக,
‘வைவா‘ தேர்வுகள் நடத்த
திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால்,
அதி கனமழை மற்றும்
வானிலை மைய எச்சரிக்கையால், இன்று முதல் 13ம்
தேதி வரையில் நடக்கவிருந்த, வைவா மொழி தேர்வுகள்
தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மறுதேதி
பின்னர் அறிவிக்கப்படும்.