பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் பணிகள் ஜூன்
1ல் தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு
விடைத்தாள் திருத்தும் பணிகள்
ஜூன் 1ம் தேதி
முதல் நடைபெறவுள்ளது.
மாநிலப்
பாடத் திட்டத்தில் பிளஸ்
2 பொதுத் தேர்வு கடந்த
5ம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை சுமார்
8.69 லட்சம் மாணவ, மாணவிகள்
எழுதுகின்றனா். மே
28ம் தேதி வரை
தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்தநிலையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1ம்
தேதி தொடங்க உள்ளதாக
கூறப்படுகிறது.
இது குறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது:
ஒவ்வொரு
பாடத் தேர்வு முடிந்த
பிறகும், மாணவா்களின் விடைத்தாள்கள் மண்டல தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்கள் மே 28ம் தேதிமுதல்
2 கட்டமாக அனுப்பி வைக்கப்படும்.
ஜூன்
1 முதல் 8ம் தேதி
வரை விடைத்தாள் திருத்தும்பணி நடக்க உள்ளது. இதில்
சுமார் 46,000 முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா். தொடா்ந்து
மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட
பணிகளை முடித்து, ஏற்கெனவே
திட்டமிட்டபடி தேர்வு
முடிவுகள் ஜூன் 23ம்
தேதி வெளியிடப்படும்.