TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
+2 தேர்வுக் கட்டணம் – இன்று முதல் செலுத்த பள்ளிகளுக்கு
உத்தரவு
பிளஸ் 2 மாணவா்களுக்கான
பொதுத்
தேர்வுக்
கட்டணத்தை
வெள்ளிக்கிழமை
முதல்
ஜன.
20ம்
தேதிக்குள்
செலுத்துமாறு
பள்ளிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில்
(2022-2023) பிளஸ்
2 பொதுத்தேர்வு
எழுதவுள்ள
மாணவா்களிடமிருந்து
(தேர்வுக்
கட்டணம்
செலுத்துவதிலிருந்து
விலக்கு
அளிக்கப்படவா்களைத்
தவிர்த்து)
தேர்வுக்
கட்டணத்தைப்
பெற்று
அந்தத்
தொகையை
வியாழக்கிழமை
முதல்
ஜன.20ம் (20.01.2023)
தேதிக்குள்
அரசுத்
தேர்வுகள்
இயக்ககத்துக்கு
இணையவழியில்
செலுத்த
வேண்டும்.
சுயநிதி,
மெட்ரிகுலேஷன்
மற்றும்
ஆங்கிலோ
இந்தியப்
பள்ளிகளில்
பயின்று
பிளஸ்
2 பொதுத்தேர்வெழுதும்
மாணவா்கள்
தேர்வுக்
கட்டண
விலக்கு
பெறத்
தகுதியுடைவா்கள்
அல்லா்.
இணைய வழியில் கட்டணங்கள் செலுத்துவது தொடா்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு
பள்ளித்
தலைமை
ஆசிரியா்
சம்பந்தப்பட்ட
மாவட்ட
அரசுத்
தேர்வுகள்
இயக்கக
ஒருங்கிணைப்பாளரை
தொடா்பு
கொள்ளலாம்.
எனவே பிளஸ் 2 பொதுத்தேர்வுக்
கட்டணம்,
அட்டவணைப்படுத்தப்பட்ட
மதிப்பெண்
பட்டியலுக்கான
கட்டணம்
ஆகியவற்றை
செலுத்த
பள்ளிகளுக்கு
அனைத்து
மாவட்ட
முதன்மைக்
கல்வி
அலுவலா்களும்
அறிவுறுத்த
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


