மாணவியருக்கு கராத்தே
பயிற்சி அளிக்க திட்டம்
மாணவியரின் பாதுகாப்பை கருதி, அவர்களுக்கு கராத்தே தற்காப்பு கலை
கற்றுக்கொடுக்க, மாநில
அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, 1,000 கராத்தே ஆசிரியர்களை நியமிக்க ஆலோசிக்கிறது.
இது தொடர்பாக, சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி கூறியதாவது:
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க,
தற்காப்பு கலை மிகவும்
அவசியம். மாணவியரின் பாதுகாப்புக்காக, கராத்தே கற்றுத்தர திட்டமிட்டுள்ளோம். இது, அவர்களின்
பாதுகாப்புக்கு பயன்படும்.
உறைவிடப்பள்ளி மாணவியருக்கு, கராத்தே
கற்றுத்தர 1,000 ஆசிரியர்களை நியமிக்க
அரசு ஆலோசிக்கிறது. இம்முறை
தீன் தயாள் உபாத்யாயா
பெயரில், 1,000 மாணவர்கள் திறன்
கொண்ட, ஐந்து உறைவிடப்
பள்ளிகள் திறக்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


