TAMIL MIXER EDUCATION.ன்
ஓய்வூதியதாரர்கள் செய்திகள்
ஓய்வூதியதாரர்கள் குடும்ப
பாதுகாப்பு நிதிக்கு விண்ணப்பிக்கலாம்
ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதிக்கு, தாங்கள் வாழும்
காலத்திலேயே விண்ணப்பிக்கலாம் என,
அரசு உத்தரவிட்டுள்ளது.
நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவு:
ஓய்வூதியதாரர் பாதுகாப்பு நிதி திட்டத்தில் சேரும் நிதி, ஓய்வூதியதாரர்களின் மறைவுக்கு பின்,
அவர்களின் துணை அல்லது
வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும்.
இந்நிதியை
பெற ஓய்வூதியதாரர்கள், தாங்கள்
வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்க தேவை இல்லை என,
1997ல் அரசு உத்தரவிட்டது.
இந்த
சூழ்நிலையில், ஓய்வூதியதாரர் குடும்ப பாதுகாப்பு நிதியைப்
பெற, ஓய்வூதியதாரர் அல்லது
அவரது துணை வாழும்
காலத்தில் விண்ணப்பிக்க அனுமதிக்க
வேண்டும் என, கோரிக்கை
விடுத்தனர்.அதை அரசு
ஏற்றுள்ளது.
எனவே,
ஓய்வூதியதாரர் மற்றும்
அவரது துணை ஆகியோர்
வாழும் காலத்திலேயே, குடும்ப
பாதுகாப்பு நிதிக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow