சுவடியியல் பயிற்சி–பயிற்சிக்கு கட்டணம் கிடையாது
உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஒரு வார கால
சுவடியியல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தற்போது
தமிழர்களிடையே கல்வெட்டு,
ஓலைச்சுவடிகள் படித்து,
பழந்தமிழர் வரலாறு, பண்பாடுகளை அறியும் ஆர்வம் அதிகரித்துஉள்ளது. அதை பூர்த்தி
செய்யும் வகையில், சென்னை,
தரமணியில் உள்ள உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தில், சுவடியியல் குறித்த சிறப்பு
பயிற்சி மார்ச் 1 முதல்
8ம் தேதி வரை
நடைபெற உள்ளது.
பங்கேற்க
விரும்புவோர் தங்களின்
சுயவிபரம், புகைப்படம், கல்வித்தகுதி சான்றிதழ் நகல் ஆகியவற்றை
இணைத்து, www.ulakaththamizh.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி
செய்து
அனுப்ப வேண்டும்.
வரும்
25ம் தேதிக்குள் பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை iits@tn.nic.in iitstaramani@gmail.com என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.
பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. சொந்த
செலவில் வந்து, செல்ல
வேண்டும். பயிற்சி முடிப்போருக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். முதலில் விண்ணப்பிக்கும் 50 பேருக்கு
மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.