தமிழகத்திலும் இணையவழியில் ஆசிரியர் தகுதித் தேர்வு
மத்திய
அரசை போல, தமிழகத்திலும், ‘ன்லைன் வழியில், ஆசிரியர்
தகுதி தேர்வு நடத்தப்பட
உள்ளது.
ஆசிரியர்
பணியில் சேருவதற்கு, ஆசிரியர்
தகுதி தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டும். அதன்
தேர்ச்சி சான்றிதழ், ஏழு
ஆண்டுகள் செல்லத்தக்கதாக இருந்தது.
அதன்பின், மீண்டும் தகுதி
தேர்வை எழுத வேண்டி
இருந்தது.தற்போது, ‘ஒரு
முறை தேர்ச்சி பெற்றால்
போதும்; அந்த சான்றிதழ்
ஆயுள் முழுதும் செல்லும்‘
என, மத்திய அரசு
அறிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய இடைநிலை கல்வி
வாரியமான, சி.பி.எஸ்.இ.,
நடத்திய ஆசிரியர் தகுதி
தேர்வு சான்றிதழ், ஆயுள்
முழுதும் செல்லும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக
அரசு இன்னும் முடிவை
அறிவிக்கவில்லை.
இந்நிலையில், டிசம்பரில் புதிய கல்வி
கொள்கைப்படி, ஆசிரியர் தகுதி
தேர்வுகளை, ஆன்லைனில் நடத்த
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதை
பின்பற்றி, தமிழகத்திலும் ஆன்லைன்
வழியில் ஆசிரியர் தகுதி
தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வு மையம் அமைப்பதற்கு தேவையான கல்லுாரிகளின் பட்டியலை
தருமாறு, கல்லுாரி கல்வி
இயக்குனரகத்துக்கு, ஆசிரியர்
தேர்வு வாரியம் கடிதம்
எழுதி உள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


