பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் கையெழுத்து பயிற்சி
‘இந்து
தமிழ் திசை‘ நாளிதழ்,
ஏபிஜே அகாடமி உடன்
இணைந்து நடத்தும் மாணவ
– மாணவிகளுக்கான கோடைகால
கையெழுத்துப் பயிற்சி,
ஆன்லைனில் மே 23 முதல்
7 நாட்கள் நடைபெற உள்ளது.
பள்ளி,
கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், பல்வேறு
செயல்பாடுகளை நேரடியாகவும், ஆன்லைனிலும் ‘இந்து தமிழ்
திசை‘ நாளிதழ் தொடர்ந்து
முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக,
கையெழுத்து குறித்த ஆன்லைன்
பயிற்சி மே.23 முதல்
29ம் தேதி வரை
தினமும் மாலை 5 முதல்
6 மணி வரை நடைபெறவுள்ளது.
6 முதல்
12ம் வகுப்பு வரை
படிக்கும் மாணவர்களுக்கு கோடைகாலப்
பயிற்சியாக நடத்தப்படும் இந்த
ஆன்லைன் கையெழுத்துப் பயிற்சியில் மாணவ – மாணவிகளின் கையெழுத்துத் திறனை வளர்த்தெடுக்கும் வகையில்
பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இதில்
பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/00578 என்ற
லிங்க்கில், ரூ.825 கட்டணம்
செலுத்தி, பதிவுசெய்து கொண்டு
பங்கேற்கலாம். கூடுதல்
விவரங்களுக்கு 8248751369
என்ற செல்பேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.