November முதல்
Online தேர்வுகள் நடத்தப்படாது – சென்னை
பல்கலைக்கழகம்
இளநிலை
மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான அனைத்துப் பருவத்
தேர்வுகளும் வரும் நவம்பர்
மாதம் முதல் நேரடியாகவே நடத்தப்படும் ஆன்லைன்
மூலம் நடத்தப்படாது என்று
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
நவம்பர்
மாதம் முதல் அனைத்து
மாணவர்களும் பருவத் தேர்வுகளை
நேரில் வந்து வகுப்பறைகளில் தான்
எழுதுவார்கள் எனவும்
சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்புப்
பெற்ற அனைத்துக் கல்லூரிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நேரடியாக தேர்வுகளை
நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.