பி.எச்டி
படிப்புகளுக்கு ஏப்ரல்
8, 9ல் இணையவழி நுழைவுத்தேர்வு
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்புகளுக்கான நுழைவுத்
தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆராய்ச்சி
படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வுகள் மூலம் அனுமதி
அளிக்கப்படுகிறது. இந்த
வகையில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 8 மற்றும்
9 ஆகிய தேதிகளில் ஆன்லைன்
வழியாக நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.
தமிழகத்தில் CORONA பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்கலைக்கழகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அர.மருதகுட்டி செய்திக்குறிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார். அதில்,
சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.பில்
மற்றும் பி.எச்டி
ஆய்வுப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஏப்ரல் மாதம்
8 மற்றும் 9 ஆகிய தேதிகளில்
நடைபெறவுள்ளது.
இணையவழி
தேர்வாக நடத்தப்படும் இந்த
தேர்வுகளை மாணவர்கள் அனைவரும்
அவரவர் இடத்திலிருந்தே கணினி,
மடிக்கணினி, கைபேசி வழியாக
தேர்வுகளை எழுதலாம். முன்னதாக
மாணவர்கள் பதிவு செய்துள்ள
தொலைபேசி எண்ணுக்கு ஒரு
கடவுச்சொல் கொடுக்கப்படும். அந்த
கடவுச்சொல் எண்ணை வைத்து
மாணவர்கள் காலை 10 மணி
முதல் மாலை 5 மணி
வரையுள்ள ஏதாவது 90 நிமிடங்களில் இந்த தேர்வினை எழுதலாம்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை
அறிந்து கொள்ள (www.msuniv.ac.in – Research link –
Announcement / Circular) என்ற இணையதளத்தை அணுகலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


