TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
எண்ணும் எழுத்தும் 3ம் பருவ பயிற்சி டிச.15ல் தொடக்கம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான
எண்ணும்
எழுத்தும்
3ம்
பருவத்திற்கான
பயிற்சி
டிச.15ல் தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
2022-2023ம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள
அனைத்து
அரசு
மற்றும்
அரசு
உதவி
பெறும்
பள்ளிகளில்
1 முதல்
3-ம்
வகுப்பு
பயிலும்
மாணவர்களுக்கு
எண்ணும்
எழுத்தும்
திட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கான
முதல்
மற்றும்
இரண்டாம்
பருவத்திற்கான
பாடப்பொருளை
உருவாக்கி
அனைத்து
ஆசிரியர்களுக்கும்
பயிற்சிகள்
வழங்கியது.
இதைத் தொடர்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எண்ணும் எழுத்தும் சார்ந்து 3ம் பருவ பயிற்சிக்கான
பணியை
முடித்துள்ளது.இதையடுத்து 1 முதல் 3ம் வகுப்பு
கற்பிக்கும்
அனைத்து
ஆசிரியர்களுக்கும்
எண்ணும்
எழுத்தும்
சார்ந்து
3ம்
பருவத்திற்கான
மாநில
மற்றும்
மாவட்ட
அளவிலான
பயிற்சிகள்
வழங்கத்
திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக,
தமிழ்,
ஆங்கிலம்
மற்றும்
கணிதப்
பாடங்களுக்கு
மாநில
அளவிலான
முதன்மை
கருத்தாளர்களுக்கான
பயிற்சி
மதுரை
மாவட்டம்,
நாகமலை
புதுக்கோட்டையில்
அமைந்துள்ள
பில்லர்
பயிற்சி
மையத்தில்
டிச.
15 முதல்
17ம்
தேதி
வரை
3 நாட்கள்
நடைபெறவுள்ளது.
இதையடுத்து மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான
கருத்தாளர்
பயிற்சி
டிச.19
முதல்
21ம்
தேதி
வரையிலும்
ஒன்றிய
அளவிலான
பயிற்சி
அடுத்தாண்டு
ஜன.2
முதல்
4ம்
தேதி
வரை
நடத்த
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


