✨ புதிய பாடப்புத்தக உருவாக்கப் பணிக்கான வல்லுநர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் – டிசம்பர் 26 கடைசி தேதி!
தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) சார்பில் புதிய பாடப்புத்தக உருவாக்கப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பணியில் பங்கேற்கத் தகுதியும் ஆர்வமும் உள்ள நிபுணர்களிடமிருந்து விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தத் தேர்வு, தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை – 2025 அடிப்படையில் நடைபெற உள்ளது. பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் வகையில் புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும்.
🎓 யார் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பிப்போர்:
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
- தொடர்புடைய பாடத்தில் உரிய கல்வித்தகுதி பெற்றவர்கள் இருக்க வேண்டும்
- கற்பித்தல் அனுபவம் கொண்டவர்கள் முன்னுரிமை
- கற்பித்தல் அணுகுமுறைகளில் நிபுணத்துவம்
- முன்னர் பாடப்புத்தகம் அல்லது கல்வி நூல் உருவாக்கப் பணியில் பங்கேற்ற அனுபவம் இருந்தால் மேன்மை
- சமர்ப்பிக்கப்படும் பாட வரைவு (sample lesson plan) மதிப்பிட்டு தேர்வு நடைபெறும்
📌 தேர்வு நடைமுறை
- கிடைக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் தகுதிகள் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்
- தேர்வு செய்யப்பட்ட நிபுணர்களுக்கு அடுத்த நிலை பணிக்கான விவரங்கள் தெரிவிக்கப்படும்
- SCERT வழங்கும் பாட தலைப்புகளின் அடிப்படையில் மாதிரி பாட வரைவை தயாரித்து
டிசம்பர் 26க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
💻 எப்படி விண்ணப்பிப்பது?
பாட தலைப்புகள், தகுதிகள், மாதிரி விண்ணப்பம் உள்ளிட்ட முழு விவரங்களையும் பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்:
அனைத்து விண்ணப்பங்களும் இந்த இணைதளத்தின் வழியாகவே சமர்ப்பிக்க வேண்டும்.
📄 முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்கும் கடைசி தேதி: டிசம்பர் 26, 2025
- பாட வரைவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: டிசம்பர் 26, 2025
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

