
வேலூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர், நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 2 முதல் மே 2 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வே.ரா.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
📍 பயிற்சி மையங்கள்:
1️⃣ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அணைக்கட்டு
2️⃣ திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம்
3️⃣ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.வி.குப்பம்
4️⃣ அரசு மேல்நிலைப்பள்ளி, கணியம்பாடி
5️⃣ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி
6️⃣ இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி, பேரணாம்பட்டு
7️⃣ அரசு மேல்நிலைப்பள்ளி, கொணவட்டம்
8️⃣ அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, வேலூர்
👨🎓 பங்கேற்கும் மாணவர்கள்: 266 மாணவர்கள்
📚 பயிற்சி உள்ளடக்கம்:
✅ நீட் தேர்வுக்கு தேவையான முக்கிய பாடப்பிரிவுகளில் பயிற்சி
✅ இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் சிறப்பு கையேடுகள் வழங்கப்படும்
✅ தினந்தோறும் அலகுத்தேர்வுகள் மற்றும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும்
✅ சிறந்த பயிற்சியாளர்களால் நேரடி வழிகாட்டுதல்
இந்த பயிற்சி வகுப்புகள் மருத்துவ படிப்பு குறிக்கோளாக வைத்துள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 🎯📖

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

