நாடு முழுவதும்
ஜூலை 17ந் தேதி
நீட் நுழைவுத்தேர்வு
மருத்துவ
படிப்புகளான MBBS., மற்றும்
BDS., ஆகிய படிப்புகளுக்கு மத்திய அரசால் நீட்
நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும்
ஜூலை மாதம் 17ந்
தேதி நடத்தப்படும் என்று
தேசிய தேர்வு முகமை
அறிவித்திருக்கிறது. நீட்
தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள்
அனைவரும் நாளை முதல்
விண்ணப்பிக்கலாம் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய
தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வு தமிழ்,
ஆங்கிலம், இந்தி உள்பட
13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.
நீட் தேர்வு எழுதுவதற்கு நாளை முதல் வரும்
மே 7ந் தேதி
வரை விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.