TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
தேசிய தொழிற்
பழகுநர் பயிற்சி சேர்க்கை
முகாம்
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம்
பிரதான் மந்திரி தேசிய
தொழிற் பழகுநர் பயிற்சி
சேர்க்கை முகாம் (PMNAM) திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளையில் உள்ள
தமிழ்நாடு தனியார் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 08.08.2022ம்
தேதி திங்கள் கிழமை
அன்று காலை 10 மணி
முதல் மாலை 4 மணி
வரை நடைபெற உள்ளது.
இதில்
திருவாரூர், கோயம்புத்துர் மற்றும்
சென்னையில் உள்ள முன்னணி
தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தேசிய தொழிற் பழகுநர்
பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வு
செய்ய உள்ளார்கள். எனவே,
இம்முகாமில் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI)பயிற்சி முடித்த
பயிற்சியாளர்கள் புகைப்படம் மற்றும் அனைத்து அசல்
சான்றிதழ்களுடன் பங்கேற்க
வேண்டும்.
மேலும்,
விவரங்களுக்கு, 9943064455
மற்றும் 04365 250126 என்ற தொலைபேசி
எண்ணிலும், adcentretvr@gmail.com என்கிற
மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு
கொண்டு பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here