நாடா நுழைவுத்
தேர்வு – விண்ணப்பம் தொடக்கம்
பி.ஆர்க்.
எனப்படும் இளநிலை கட்டிடவியல் பொறியியல் படிப்பில் சேருவதற்கான ‘நாடா’ (தேசிய கட்டிடவியல் திறனறித் தேர்வு) நுழைவுத்
தேர்வுக்கு இன்று (மார்ச்
5) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில்
அறிவித்துள்ளது.
பி.ஆர்க்.
படிப்பில் சேர நாடா
நுழைவுத் தேர்வில் தகுதி
பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வை
இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில்
நடத்தி வருகிறது. இந்தத்
தேர்வு நடைமுறையில் மாற்றம்
செய்யப்பட்டு, 2019-ம்
ஆண்டு முதல் ஆண்டுக்கு
2 முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2021-ம் ஆண்டுக்கான ‘நாடா’ தேர்வு குறித்த
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி,
பி.ஆர்க். (5 ஆண்டு)
படிப்பில் சேர முதல்
நாடா தேர்வு எழுத
விரும்புவோர் மார்ச்
5-ம் தேதி முதல்
28-ம் தேதி வரையும்,
2-ம் தேர்வு எழுத
விரும்புவோர் மார்ச்
5-ம் தேதி முதல்
மே 30-ம் தேதி
வரையும் http://nata.in/
என்ற இணையதளம் வழியாக
விண்ணப்பிக்கலாம்.
முதல்
தேர்வு ஏப்.10-ம்
தேதி நடைபெறும். அதற்கான
முடிவுகள் 14-ம் தேதி
வெளியிடப்படும். 2-ம்
தேர்வு ஜூன் 12-ம்
தேதி நடத்தப்பட்டு 16-ம்
தேதி முடிவு வெளியிடப்படும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை நாடா–வின்
இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.