தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மக்களின் நலனைக் கவனித்தும், உயர் தர சுகாதார சேவைகளை ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 1,256 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கவுள்ளன.
📍 துவக்க நிகழ்வு இடம்:
சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி
🏥 முகாம்களில் இடம்பெறும் முக்கிய சேவைகள்:
- ரத்த அழுத்தம், சக்கரை, சிறுநீரக செயல்பாடு பரிசோதனை
- கண், காது, மூக்கு, பல் மற்றும் நரம்பியல் பரிசோதனைகள்
- கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை
- எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட், எக்கோகார்டியோகிராம்
- மனநல, குழந்தை நலம், தோல் மற்றும் மகப்பேறு மருத்துவ ஆலோசனைகள்
- முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பதிவு
- மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்கள்
🎯 யார் பங்கேற்கலாம்?
- 40 வயதுக்கு மேற்பட்டோர்
- நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயாளிகள்
- கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்
- மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர்
- சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்
🕘 முகாம்கள் நடைபெறும் நாட்கள்:
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
📊 மொத்தம் 1,256 முகாம்கள்:
- 388 வட்டாரங்களில் 1,164 முகாம்கள்
- பெருநகர சென்னை மாநகராட்சி – 15 முகாம்கள்
- பிற மாநகராட்சிகள் – 77 முகாம்கள்
🖥️ HMIS 3.0 மூலம் டேட்டா கண்காணிப்பு:
அனைத்து மருத்துவ சேவைகள், பரிசோதனைகள், காப்பீட்டுப் பதிவு, மற்றும் சிகிச்சை தொடர்ச்சிகள் நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை மூலம் கண்காணிக்கப்படும்.
🔔 மேலும் இவ்வாறு நன்மை தரும் அரசுத் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கு இங்கே இணையுங்கள்:
👉 WhatsApp குழுவில் இணைய – Join here
👉 Telegram சேனலில் இணைக – Follow here
👉 Instagram பக்கம் – Follow here
❤️ நம்ம சேவையை விரிவடைய ஆதரிக்க விரும்புகிறீர்களா? நன்கொடை வழங்கலாம்:
👉 Donate here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

