TAMIL MIXER EDUCATION- ன் விவசாய செய்திகள்
மண்ணின் தரத்தை
மேம்படுத்த நுண்ணுயிர் உரங்களைப்
பயன்படுத்தலாம்
நெல்
வயலில் நுண்ணுயிர் உரங்களை
பயன்படுத்தினால் மண்ணின்
தரம் மேம்படும் என்றார்
திருச்சி விதைச் சான்று
மற்றும் அங்ககச் சான்
உதவி இயக்குநா் அறிவழகன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அங்கக
வேளாண்மையில் பயன்படும்
இடுபொருள்களில் நுண்ணுயிர் உரம் மிக முக்கிய
பங்கு வகிக்கிறது. நுண்ணுயிர்கள் உரங்களாக மட்டுமின்றி அங்கக
வேளாண்மையில் பயன்படும்
இடு பொருள்களான தொழுவுரம்,
மக்கு உரம், பஞ்சகாவியா ஆகியவை உற்பத்தி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.
நுண்ணுயிர் உரங்களில் தழைச்சத்தை நிலைநிறுத்துபவை, மணிச்சத்தை கரைப்பவை, சாம்பல்
சத்தை அளிப்பவை மற்றும்
நுண்ணூட்டச் சத்தை கரைத்து
அளிப்பவை என ஒவ்வொரு
சத்துக்களுக்கென்றும் ஒரு
நுண்ணுயிர் உரம் உள்ளது.
எனவே நுண்ணுயிர் உரங்களை
விதை அல்லது மண்ணின்
வழியாக அளிக்கும்போது பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க
உதவி செய்கிறது.
இவ்வாறு
நுண்ணுயிர்களின் உதவியால்
பயிர்கள் மண்ணில் இருந்து
ஊட்டசத்துக்களை எளிதில்
எடுத்துக் கொள்ள முடியும்
என்பதால் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.