ஏப்ரல் 9 முதல்
மருத்துவமனைகளில் முன்பதிவு
கட்டாயம் – புதுச்சேரி அரசு
நாடு
முழுவதும் CORONA தாக்கம்
அதிகமாக பரவி வருகிறது.
புதுச்சேரியில் கொரோனா
தாக்கம் காரணமாக பள்ளிகள்
மூடப்பட்டுள்ளன. இதுவரை
42,000க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலால் புதுச்சேரி மருத்துவமனைகளில் கூட்டம்
அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே
அதனை தடுக்க ஜிப்மர்
மருத்துவமனை இயக்குனர் ராகேஷ்
அகர்வால் அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டார்.
அதில்:
புதுச்சேரியில் கொரோனா
தாக்கம் அதிகமாக பரவி
வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலை
கட்டுப்படுத்த முடியவில்லை.
ஜிப்மர்
மருத்துவமனைகளில் நாளை
மறுநாள் (ஏப்ரல் 09) முதல்
முன்பதிவு மூலமாக மட்டுமே
நோயாளிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதன்படி
அனைத்து மருத்துவ மற்றும்
அறுவை சிகிச்சை பிரிவுகளில் முன்பதிவு செய்து மருத்துவ
ஆலோசனைக்கு பின்னரே வெளிப்புற
சிகிச்சை சேவைகள் வழங்கப்படும். மேலும் அவர்கள் தொலைபேசி
மூலமாக முன்பதிவு பெற்று
சிகிச்சைக்கு வர
வேண்டும். முன்பதிவு பெறுவதற்கான தொலைபேசி எண்கள் www.jipmer.edu.in என்ற
ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்
“ஹலோ ஜிப்மர்” என்ற
செயலி மூலமாகவும் முன்பதிவு
செய்து கொள்ளலாம். அவசர
தேவைகளுக்கு எந்தவித முன்பதிவு
தேவையில்லை. மேலும் ஒரு
நாளில் 100 பேர் மட்டுமே
அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட
உள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


