HomeBlogபொறியியல் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய பட்டியலின மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

பொறியியல் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய பட்டியலின மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம்

Listed students can apply tomorrow to choose engineering colleges and courses

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி செய்திகள்

பொறியியல் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை
தேர்வு
செய்ய
பட்டியலின
மாணவர்கள்
நாளை
விண்ணப்பிக்கலாம்

பொறியியல் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை
தேர்வு
செய்ய
பட்டியலின
மாணவர்கள்
நாளை
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது கலந்தாய்வு, துணை கலந்தாய்வில்
பங்கேற்று
இடங்களை
தேர்வு
செய்த
பட்டியலின
மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
நாளை
காலை
10
மணி
முதல்
இரவு
7
மணி
வரை
கல்லூரி
மற்றும்
பாடப்பிரிவுகளை
தேர்வு
செய்யலாம்
என
பொறியியல்
கலந்தாய்வு
குழு
அறிவித்துள்ளது.

நவம்பர் 25ம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இடஒதுக்கீடு வழங்கப்படும்,
அன்று
மாலை
5
மணிக்குள்
மாணவர்கள்
உறுதி
செய்ய
வேண்டும்.
நவம்பர்
25
ம்
தேதி
இரவு
7
மணிக்கு
மாணவர்களுக்கு
இறுதி
செய்யப்பட்ட
ஒதுக்கீட்டு
ஆணை
வழங்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின்
கீழ்
இயங்கும்
446
பொறியியல்
கல்லூரிகளில்
இளநிலைப்
படிப்புகளுக்கு
ஒரு
லட்சத்து
54,278
இடங்கள்
உள்ளன.
இவற்றை
நிரப்புவதற்கான
மாணவர்
சேர்க்கை
கலந்தாய்வு
கடந்த
ஆகஸ்ட்
20
முதல்
நவம்பர்
10
ம்
தேதி
வரை
பல்வேறு
கட்டங்களாக
நடத்தப்பட்டது.
இதில்
மொத்தம்
93,571
இடங்கள்
மாணவர்களுக்கு
ஒதுக்கீடு
செய்யப்பட்டன.

அதில் 85,023 இடங்களில் மட்டுமே மாணவர்கள் கல்லூரிகளில்
சென்று
சேர்ந்துள்ளனர்.
எஞ்சிய
இடங்களை
நிரப்புவதற்கான
துணைக்
கலந்தாய்வுக்குரிய
சேர்க்கை
விண்ணப்பப்பதிவு
கடந்த
நவம்பர்
9
ல்
தொடங்கி
13
ம்
தேதி
முடிவடைந்தது.
இதற்கு
9,500
பேர்
விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்துள்ள
மாணவர்களின்
அசல்
சான்றிதழ்
சரிபார்க்கும்
பணிகள்
அரசு
உதவி
மையங்கள்
வாயிலாக
நடத்தி
முடிக்கப்பட்டன.
தொடர்ந்து
தகுதியான
மாணவர்களின்
தரவரிசை
பட்டியல்
நவம்பர்
18
ம்
தேதி
வெளியிடப்பட்டது.

அனைத்துப் பிரிவினருக்கான
துணைக்
கலந்தாய்வு
நவம்பர்
20
முதல்
22
ம்
தேதி
வரை
இணைய
வழியில்
நடைபெற்றது.
மேலும்,
எஸ்சிஏ
காலியிடங்களில்
SC
வகுப்பினருக்கான
கலந்தாய்வு
நவம்பர்
24, 25
ம்
தேதிகளில்
நடத்தப்படுகிறது.
இதனுடன்
இந்த
ஆண்டுக்கான
பொறியியல்
கலந்தாய்வு
முழுமையாக
நிறைவு
பெறுகிறது.
ஒட்டுமொத்தமாக
இந்தாண்டு
கலந்தாய்வு
முடிவில்
60
ஆயிரத்துக்கும்
மேலான
இடங்கள்
காலியாக
இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -