TAMIL MIXER
EDUCATION.ன்
JEE செய்திகள்
JEE தேர்வு விலக்கு? – தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான
என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில்
சேருவதற்கு
JEE தேர்வு
நடத்தப்படுகிறது.
இந்தத்
தேர்வு
2 கட்டங்களாக
ஜேஇஇ
மெயின்,
அட்வான்ஸ்டு
என்று
பிரித்து
நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்தத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில்
அசாம்,
பெங்காலி,
கன்னடம்,
மலையாளம்,
ஒடிசா,
பஞ்சாபி,
தமிழ்,
தெலுங்கு,
உருது,
இந்தி,
ஆங்கிலம்,
குஜராத்தி
ஆகிய
மொழிகளில்
நடத்தப்பட
இருக்கிறது.
பிற
மொழித்
தேர்வர்கள்,
ஆங்கிலத்தில்
தேர்வை
எழுதும்
வசதி
செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான JEE மெயின் 2023 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு, டிசம்பர் 16ம் தேதி தொடங்கியது. இவர்களுக்கான
தேர்வுகள்
கடந்த
ஆண்டைப்
போலவே
இரண்டு
கட்டமாக
நடைபெற
உள்ளன.
முதல் அமர்வு (session 1) ஜனவரி மாதத்திலும் இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்திலும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 6, 8, 10 – 12 ஆகிய தேதிகளில் 2வது அமர்வு நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து
வருகின்றனர்.
இரண்டு அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள்
பெற்றுள்ளார்களோ,
அதைக்
கொண்டு
மாணவர்கள்
தரவரிசைப்படி
கல்லூரிகளில்
சேரலாம்.
இரண்டாவது
அமர்வுக்காக
விண்ணப்பப்
படிவங்கள்
மார்ச்
மாதத்தில்
வெளியாக
உள்ளன.
இந்தநிலையில்,
JEE மெயின்
தேர்வின்
ஜனவரி
மாத
அமர்வைத்
தள்ளி
வைக்க
வேண்டும்
என்று
மாணவர்கள்
கோரிக்கை
வைத்தனர்.
தொடர்ந்து,
தமிழ்நாடு
தமிழக
பள்ளிக்கல்வித்துறையும்
தேர்வுக்கு
விலக்கு
அளிக்குமாறு
தேசிய
தேர்வு
முகமைக்கு
கோரிக்கை
வைத்தது.
இதையடுத்து, JEE தேர்வில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை
தமிழக
மாணவர்கள்
உள்ளீடு
செய்ய
வேண்டிய
அவசியமில்லை
என்று
தமிழக
பள்ளிக்கல்வித்துறையின்
கோரிக்கையை
ஏற்று
தேசிய
தேர்வுகள்
முகமை
விலக்கு
அளித்துள்ளது.
கொரோனா காலத்தில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
தேர்ச்சி
என்று
மட்டுமே
அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து,
தமிழக
மாணவர்கள்
இணையதளத்தில்
பதிவிடும்போது
மதிப்பெண்கள்
கேட்கப்படாது
என
தேசிய
தேர்வுகள்
முகமை
விளக்கமளித்துள்ளது.
JEE
விண்ணப்பத்தில்
10ம்
வகுப்பு
மதிப்பெண்
குறிப்பிடுவதிலிருந்து
விலக்கு
அளித்த
தேசிய
தேர்வு
முகமை
நடவடிக்கை
வரவேற்கத்தக்கது
என
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்:
JEE
எனப்படும்
கூட்டு
நுழைவுத்தேர்வுக்கான
ஆன்லைன்
விண்ணப்பத்தில்,
தமிழ்நாடு
பாடத்திட்ட
மாணவர்கள்
பத்தாம்
வகுப்பு
மதிப்பெண்களை
குறிப்பிடுவதிலிருந்து
விலக்கு
அளிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய
தேர்வு
முகமையின்
இந்த
நடவடிக்கை
நிம்மதியளிக்கிறது;
வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில்
2020-2021ம்
ஆண்டு
பத்தாம்
வகுப்பு
பொதுத்தேர்வு
நடத்தப்படாததால்
மதிப்பெண்
வழங்கப்படவில்லை.
ஆனால்,
பத்தாம்
வகுப்பு
மதிப்பெண்கள்
குறிப்பிடப்பட
வேண்டும்
என
அறிவிக்கப்பட்டிருந்ததால்
தமிழக
மாணவர்களால்
JEE தேர்வுக்கு
விண்ணப்பிக்க
முடியவில்லை.
தமிழ்நாட்டு மாணவர்களின் இந்த சிக்கல் குறித்து நான் தான் தமிழக அரசின் கவனத்திற்கும்
தேசிய
தேர்வு
முகமையின்
கவனத்திற்கும்
கொண்டு
சென்றேன்.நாடாளுமன்ற மாநிலங்களவையிலும்
இதை
சுட்டிக்காட்டி
தமிழக
மாணவர்களுக்கு
விலக்களிக்க
வேண்டும்
என்று
கோரியிருந்தேன்.
அதையேற்று தமிழ்நாடு மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு
விலக்கு
அளிக்கப்பட்டிருப்பது
மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த
வாய்ப்பை
பயன்படுத்தி
தமிழக
மாணவர்கள்
அதிக
எண்ணிக்கையில்
JEE நுழைவுத்
தேர்வை
எழுதி
வெற்றி
பெற
வாழ்த்துகளைத்
தெரிவித்துக்
கொள்கிறேன்.