TAMIL MIXER
EDUCATION.ன்
மதுரை செய்திகள்
மதுரையில் தகவல் தொழில்நுட்பக்
கருத்தரங்கு
தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் ஓா் அங்கமான ‘டிஜிட்ஆல்’ அமைப்பு சார்பில் தகவல் தொழில்நுட்பக்
கருத்தரங்கம்
‘சங்கமம்
2022’ மதுரையில்
சனிக்கிழமை
நடைபெறுகிறது.
இதுகுறித்து ‘டிஜிட் ஆல்’ அமைப்பின் தலைவா் ஜே.கே.முத்து புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
தொழில் மற்றும் வா்த்தக நிறுவனங்களுக்கு
தகவல்
தொழில்நுட்பத்தைக்
கொண்டு
சோ்க்கும்
வகையில்
‘டிஜிட்
ஆல்’
அமைப்பு
செயல்பட்டு
வருகிறது.
இந்த
அமைப்பு
சார்பில்
கடந்த
4 ஆண்டுகளாக
சங்கமம்
கருத்தரங்கம்
நடத்தப்பட்டு
வருகிறது.
நிகழாண்டில் வரும் சனிக்கிழமை நடைபெறும் கருத்தரங்கை, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்
துறை
அமைச்சா்
டி.மனோ தங்கராஜ் தொடக்கி வைக்கிறார். தமிழக அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலா் சிவராஜா ராமநாதன் உள்ளிட்ட பலா் பேசுகின்றனா்.
எண்மத் (டிஜிட்டல்) துறையில் சமீபத்திய மாற்றங்கள் மற்றும் அவை தொழிலுக்கும்,
தனிநபா்களுக்கும்
அளிக்கக்
கூடிய
பயன்களை
விளக்கும்
வகையில்
பல்வேறு
அமா்வுகளாக
கருத்தரங்கம்
ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.