தொழில்துறை ஒதுக்கீடு
சேர்க்கை அறிவிப்பு
அண்ணா
பல்கலையில், தொழில்துறை ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை அறிவிக்கப் பட்டு உள்ளது.
அண்ணா
பல்கலையின் வளாக கல்லுாரிகளான, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி,
அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி.,
ஆகிய கல்லுாரிகளில், தொழில்துறை ஒதுக்கீட்டில், பி.இ.,
– பி.டெக்., படிப்பில்
மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த
பிரிவில் சேர்க்கை பெற
விரும்பும் மாணவர்கள், அண்ணா
பல்கலையின், http://www.annauniv.edu/cfa
என்ற இணையதளம் வழியே
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க, செப்டம்பர், 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள தொழில்
நிறுவனங்களின் பரிந்துரையில் மட்டும், இந்த சேர்க்கை
நடத்தப்படும்.