TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய செய்திகள்
அரசு மானியத்தில் நாட்டுக் கோழிப்பண்ணை
அரசு மானியத்துடன்
நாட்டுக்கோழிப்
பண்ணை
அமைக்க
தகுதியானவா்கள்
விண்ணப்பிக்கலாம்
என
மாவட்ட
ஆட்சியா்
வீ.ப.ஜெயசீலன் தெரிவித்தார்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விருதுநகா் மாவட்டத்தில்
கிராமப்புறத்தைச்
சோந்தவா்களுக்கு
50 சதவீத
அரசு
மானியத்தில்
நாட்டுக்
கோழிப்
பண்ணை
அமைக்க
250 நாட்டுக்
கோழிக்
குஞ்சுகள்
இலவசமாக
வழங்கப்படும்.
இதில்
பயனாளியின்
பங்குத்
தொகை
ரூ.1,50,625
செலுத்த
வேண்டும்.
கோழிக்
கொட்டகை
அமைக்க
குறைந்தபட்சம்
625 சதுரஅடி
நிலம்
சொந்தமாக
இருக்க
வேண்டும்.
கோழிப்பண்ணை அமையும் இடம் மனிதக் குடியிருப்பு
பகுதியிலிருந்து
விலகி
இருக்க
வேண்டும்.
விண்ணப்பதாரா்கள்
இடத்தின்
சிட்டா,
அடங்கல்
நகல்
ஆகியவற்றை
இணைக்க
வேண்டும்.
மேலும்,
2022-23 ஆம்
ஆண்டுக்கான
நாட்டுக்
கோழி
வளா்ப்புத்
திட்டத்தின்
கீழ்
பயனடைந்திருக்கக்
கூடாது.
இதேபோல,
பயனாளி
3 ஆண்டுகளுக்கு
குறையாமல்
பண்ணையைப்
பராமரிக்க
உறுதி
அளிக்க
வேண்டும்.
இந்தத் திட்டத்தில் விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள்,
மாற்றுத்திறனாளிகளுக்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.
மேலும்
30 சதவீதம்
ஆதிதிராவிடா்,
பழங்குடியின
பயனாளிகள்
தோந்தெடுக்கப்படுவா்.
இந்தத்
திட்டத்தில்
பயன்பெற
விரும்பும்
பயனாளிகள்,
திட்டம்
தொடா்பாக,
அருகேயுள்ள
கால்நடை
மருந்தகம்,
கால்நடை
உதவி
மருத்துவரை
அணுகி
விரிவான
விவரங்களைத்
தெரிந்து
கொண்டு
விண்ணப்பங்களைப்
பெற்றுக்
கொள்ளலாம்.
பூா்த்தி
செய்யப்பட்ட
விண்ணப்பங்களை
ஆதார்
அட்டை
நகல்,
நில
ஆவண
நகல்களுடன்
ஜூன்
20க்குள்
கால்நடை
உதவி
மருத்துவரிடம்
சமா்ப்பிக்க
வேண்டும்.