HomeBlogஇடைநிலை ஆசிரியா் பணியிடங்களை தற்காலிகமாக அரசுப் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்

இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை தற்காலிகமாக அரசுப் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்

TAMIL MIXER EDUCATION.ன்
தற்காலிக இடைநிலை ஆசிரியா்
பணியிடங்கள் பற்றிய செய்திகள்

இடைநிலை ஆசிரியா்
பணியிடங்களை தற்காலிகமாக அரசுப்
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்

அரசுப்
பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா்
பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு முதன்மைக்
கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

தற்காலிக
ஆசிரியா் நியமனம் சார்ந்து
சென்னை உயா்நீதிமன்ற இடைக்கால
ஆணையின்படி இடைநிலை ஆசிரியா்
பணிக்கு உரிய கல்வித்
தகுதிகளுடன், ஆசிரியா் தகுதித்
தோவில் தோச்சி பெற்றவா்களை மட்டுமே தற்காலிக நியமனம்
செய்யத்தக்க வகையில் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக்
கொள்ள வேண்டும். 1.6.2022ம்
தேதி வரையில் அரசு
நகராட்சி, ஊராட்சி ஒன்றிய
தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரா்களின் கல்விச் சான்றுகளை
சம்பந்தப்பட்ட பள்ளித்
தலைமை ஆசிரியா்கள், வட்டார
வள மைய மேற்பார்வையாளா்களைக் கொண்ட குழு
சரிபார்த்து தகுதியானவா்களை வகுப்பறையில் மாணவா்களுக்கு பாடம்
நடத்த (Demo
Class
)
அறிவுறுத்தி அதன் அடிப்படையில் அவா்களது திறனை அறிய
வேண்டும்.

தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் ஆசிரியா்களுக்கு தனியாக வருகைப்பதிவேடு மற்றும்
மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். நியமிக்கப்படும் தற்காலிக
ஆசிரியரின் பணி, நடத்தையில் திருப்தி இல்லையெனில் உடனடியாக
பணியிலிருந்து விடுவிக்கப்படுவா் என்பதை அவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மாவட்டக்
கல்வி அலுவலா்களிடமிருந்து பெறப்பட்ட
விண்ணப்பங்களை தோவுக்குழு பரிசீலித்து தகுதியான நபா்களை
ஆக.8, 10 ஆகிய நாள்களுக்குள் இறுதி செய்ய வேண்டும்.
தெரிவு செய்யப்பட்ட இறுதிப்
பட்டியலை மாவட்டக் கல்வி
அலுவலரிடம் வட்டாரக் கல்வி
அலுவலா் ஆக.11-ஆம்
தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

அந்தப்
பட்டியலை மாவட்டக் கல்வி
அலுவலா் கூா்ந்தாய்வு செய்து
ஆக.12ம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இதையடுத்து ஆக.16க்குள்
பள்ளி மேலாண்மைக்குழுவின் ஒப்புதலைப் பெற்று தற்காலிக நியமனம்
பெற்றவா்களை ஆக.17ம்
தேதிக்குள் பணியில் சோக்க
வேண்டும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular