TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
பள்ளிகளுக்கு அரசு
புதிய உத்தரவு – கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை:
- பள்ளிகளில் மாணவர்கள்
தங்களுக்குள் மோதிக்
கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல்,
பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை
விபத்து உள்ளிட்ட ஏதேனும்
அசம்பாவிதங்கள் நடந்தால்
உடனடியாக, அவரவர் சார்ந்த
CEO வின் கவனத்திற்கு கொண்டு
செல்ல வேண்டும். - CEO வின் அனுமதி
பெற்ற பிறகே, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். - குடிநீர், கழிப்பறை,
ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்
எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட
விவரம் போன்ற எதையும்
ஊடகங்களுக்கு CEO அனுமதியின்றி தெரிவிக்கக் கூடாது. - பள்ளிக்கு உள்ளூர்
விடுமுறை விட்டால், சிஇஓ–க்கு
முறைப்படி கடிதம் வாயிலாகவும், தொலை பேசியிலும் தகவல்
தெரிவிக்க வேண்டும். மரத்தடியில்வகுப்புகளை நடத்தக் கூடாது. - பள்ளிகளில் தயாரிக்கப்படும் சத்துணவு தரமாக, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை
ஆசிரியர்கள் தினந்தோறும் ஆய்வு
செய்ய வேண்டும். - பேருந்து மேற்கூரையின் மீது அமர்ந்து மாணவர்கள்
பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில் காலை இறைவணக்க
கூட்டத்தில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். - பள்ளி பணியாளர்கள் அனைவரும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளிக்கு வர
வேண்டும். - ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்த கூடாது.
தங்களின் சொந்த வேலைக்காக
மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியை
விட்டு வெளியே அனுப்ப
கூடாது. - ஆசிரியர்கள் பள்ளி
வளாகத்தை விட்டு வெளியே
செல்லும் முன், Movement
Register-ல் பதிவு செய்ய
வேண்டியது கட்டாயம். - பள்ளிகள் – பொதுமக்கள் இடையேயான உறவு நல்ல
முறையில் இருப்பதை உறுதி
செய்ய வேண்டும். - பள்ளியில் நடைபெறும்
அனைத்து நிகழ்வுக்கு தலைமை
ஆசிரியரே பொறுப்பேற்று, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய
வேண்டும்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


