நாடு முழுவதும்
255 நகரங்களில் நடக்கிறது –
மருத்துவ பட்டமேற்படிப்புக்கு நீட்
– மார்ச் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
மருத்துவ
பட்டமேற்படிப்புகளுக் கான
நீட் தேர்வுக்கு மார்ச்
15-க்குள் ஆன்லைனில் விண்ணப்
பிக்கலாம் என்று தேசிய
தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா
முழுவதும் அரசு மற்றும்
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ்
படிப்புகளுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
இதில், தமிழகத்தில் மட்டும்
4 ஆயிரம் இடங்கள் உள்ளன.
இந்த
இடங்கள் ‘நீட்’ தேர்வில்
தகுதி பெறுபவர்களைக் கொண்டு
நிரப்பப்படுகிறது. இந்நிலையில், 2021 – 2022 கல்வி ஆண்டு
மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’
தேர்வு அறிவிப்பை தேசிய
தேர்வுகள் வாரியம் வெளியிட்டுள்ளது.
அதில்
மருத்துவ பட்டமேற் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு ஏப்ரல்
18-ம் தேதி பிற்பகல்
2 மணிமுதல் மாலை 5.30 மணி
வரை ஆன்லைன் மூலம்
நடைபெறுகிறது. இந்தியா
முழுவதும் 255 நகரங்களில் தேர்வு
நடைபெறவுள்ளது. பிப்.23-ம்
தேதி பிற்பகல் 3 மணியில்
இருந்து மார்ச்15-ம்
தேதி நள்ளிரவு 11.55 மணிவரை
https://nbe.edu.in/, https://www.natboard.edu.in/ ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம்.
ஹால்டிக்கெட் ஏப்.12-ல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு
முடிவுகள் மே 31-ல்வெளியிடப்படும் என்று தெரிவிக்
கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


