பொதுத் தமிழ்
முக்கிய வினா விடைகள் – Part 4
- ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?தலைவன்
- ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?வெளவால்
- ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?முஃடீது
- மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?போனம்
- ”புத்தக சாலை”
எனும் நூலின் ஆசிரியர்?பாரதிதாசன் - “தீக்குச்சிகள்” எனும்
நூலின் ஆசிரியர்?அப்துல் ரகுமான் - “சிக்கனம்” எனும்
நூலின் ஆசிரியர்?சுரதா - “நாடு” எனும்
நூலின் ஆசிரியர்?வாணிதாசன் - அசதி, அக்கா,
அச்சம், அகம் – அகர
வரிசைப்படி சொற்களை சீர்
செய்க? அகம், அக்கா, அசதி, அச்சம் - எல்லை, எத்தன்,
எண், எலி, எஃகு
– அகர வரிசைப்படி சொற்களை
சீர் செய்க? எஃகு, எண், எத்தன், எலி, எல்லை - ”எற்பாடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?காலப்பெயர்
- “சாக்காடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?தொழிற்பெயர்
- “கேடு” என்ற
சொல்லின் வேர்ச்சொல் எது?கெடு - “சாக்காடு” என்ற
சொல்லின் வேர்ச்சொல் எது?சா - “பிசிராந்தையார் நட்புக்கு
இலக்கணமாகத் திகழ்கிறார்” – எவ்வகை
வாக்கியம்?செய்தி வாக்கியம் - “காந்தியடிகள் உண்மை
பேசாமல் இரார்” – எவ்வகை
வாக்கியம்? பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் - வலதுபக்கச் சுவற்றில்
எழுதாதே! – வழூஉச் சொல்லற்ற
வாக்கியமாக மாற்று? வலப்பக்கச் சுவரில் எழுதாதே - அவன் கவிஞர்கள்
அல்ல – ஒருமைப் பன்மைப்
பிழையற்ற தொடர் எது? - அவன் கவிஞன் அல்லன்
- ”திவ்வியகவி” என்ற
பெயரால் அழைக்கப்படுபவர்?பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் - மாதவியின் மகளின்
பெயர்?ஐயை - பாலை நில
மக்களின் பாட்டு?வேட்டுவவரி - செம்மொழியாக உயர்த்தப்பட்டுள்ள தமிழ்மொழி, செம்மொழி
தரவரிசையில்
எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?எட்டாவது இடம் - ”தமிழ் நெடுங்கணக்கு” என்று சூட்டப்படுவது?தமிழ் எழுத்துக்கள்
- சிந்து, வைகை,
யமுனை, கங்கை – அகர
வரிசைப்படி சொற்களை சீர்
செய்க? கங்கை, சிந்து, யமுனை, வைகை - அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி
வருவது?எதுகை - “கொன்றை வேந்தன்”
என்ற நூலின் ஆசிரியர்
யார்?ஒளவையார் - ”கரி” எனும்
சொல் உணர்த்துவது?யானை - மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?8
- சிங்கத்தின் இளமைப்
பெயர்?குருளை - ”யாதும் ஊரே
யாவரும் கேளிர்” எனப்
பாடியவர்?கனியன் பூங்குன்றனார் - தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல்?தொல்காப்பியம்
- ”தழல்” எனும்
சொல்லின் பொருள்?நெருப்பு - “ஏறு போல்
நட” எனக் கூறும்
இலக்கியம்?புதிய ஆத்திச்சூடி - “திணை” எனும்
சொல்லின் பொருள்?ஒழுக்கம் - கவிமணி எழுதிய
நூல்கள்?மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி - ”தணித்தல்” என்பதன்
பொருள் என்ன?குறைத்தல் - முகர்ந்து பார்த்தாலே வாடும் மலர்?அனிச்சம்
- பத்துப்பாட்டு நூல்களில்
அகமா? புறமா? என்ற சர்ச்சைக்குரிய நூல் எது?நெடுநல்வாடை - ”குடவோலை முறை”
பற்றிய குறிப்பினைக் கொண்ட
சங்க நூல் எது?அகநானூறு - ”சங்கம்” என்ற
சொல்லை முதன் முதலில்
வழங்கிய நூல்?மணிமேகலை - தமிழில் தோன்றிய
முழுமுதற் காப்பியம் எது?சிலப்பதிகாரம் - குமரகுருபரர் இயற்றிய
நூல்?நீதி விளக்கம் - பெண்பாற் பிள்ளைத்
தமிழின் பருவங்கள்?10 - ”பக்திச் சுவை
நனி சொட்டச் சொட்டப்
பாடிய கவிவலவன்” எனப்
பாராட்டப்படுபவர்?சேக்கிழார் - நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?ஜி.யூ.போப்
- ஆரிய அரசன்
பிரகத்தனுக்கு தமிழ்
அறிவுறுத்தற்குப் பாடிய
பாட்டு?குறிஞ்சிப் பாட்டு - நேரிசையாசிரியப் பாவின்
ஈற்றயலடி?முச்சீர் - வெண்பாவின் வகைப்பாடு?6
- புறத்தினை வகைப்பாடு?12
- மக்கள் கவிஞர்
என்றழைக்கப்படுபவர்?பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் - ”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்?வினைத் தொகை
- ”பாடாக் குயில்”-இச்சொல்
காட்டும் இலக்கணம்?ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - ”நீராருங் கடலுடுத்த”
என்ற தமிழ்த்தாய் வாழ்த்து
பாடியவர்?“மனோன்மணீயம்” பெ.சுந்தரனார் - ”ஜன கண
மண” எனும் தேசிய
கீதம் பாடியவர்?இரவீந்தரநாத் தாகூர் - “செந்தமிழ் நாடெனும்
போதினிலே” என்ற பாடலை
இயற்றியவர்?மகாகவி பாரதியார் - திருவருட்பாவை இயற்றியவர்?இராமலிங்க அடிகளார்
- ”திருவருட்பிரகாச வள்ளலார்”
என்னும் சிறப்பு பெயர்
பெற்றவர்?இராமலிங்க அடிகளார் - இராமலிங்க அடிகளார்
பிறந்த ஊர்?கடலூர் மாவட்டம் மருதூர் - இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?இராமையா–சின்னம்மையார்
- இராமலிங்க அடிகளார்
எழுதிய நூல்கள் எவை?
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் - மக்களுக்கு உணவளிக்க
அறச்சாலையையும், அறிவு
நெறி விளங்க ஞான
சபையையும்
நிறுவியவர்?இராமலிங்க அடிகளார் - வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம் வாடியவர்?இராமலிங்க அடிகளார் - ”ஆர்வலர்”– பொருள்
தருக?அன்புடையவர் - “என்பு”– பொருள்
தருக?எலும்பு (உடல், பொருள், ஆவி) - ”வழக்கு”– பொருள்
தருக?வாழ்க்கை நெறி - ”ஈனும்”– பொருள்
தருக?தரும் - “ஆர்வம்”- பொருள்
தருக?விருப்பம் - “நண்பு”- பொருள்
தருக?நட்பு - “வையகம்”- பொருள்
தருக?உலகம் - ”மறம்”- பொருள்
தருக?வீரம் - ”என்பிலது”- பொருள்
தருக?எலும்பில்லாதது (புழு) - ”வற்றல் மரம்”-
பொருள் தருக?வாடிய மரம் - ”புறத்துறுப்பு”- பொருள்
தருக?உடல் உறுப்புகள் - திருக்குறளை இயற்றியவர்?திருவள்ளுவர்
- திருவள்ளுவர் வாழ்ந்த
காலம்?கி.மு.31 - திருவள்ளுவரின் வேறு
பெயர்கள்?செந்நாப் போதார், தெய்வப் புலவர், நாயனார் - திருக்குறளின் பெரும்
பிரிவுகள்?அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் - திருக்குறளில் எத்தனை
அதிகாரங்கள் உள்ளன?133 - திருக்குறளில் ஒவ்வொரு
அதிகாரத்திற்கும் எத்தனை
குறட்பாக்கள் உள்ளன?10 - திருக்குறளில் மொத்தம்
எத்தனை குறட்பாக்கள் உள்ளன?1330 - திருக்குறள் பதினெண்
கீழ்கணக்கு நூல்களில் ஒன்று.
சரியா? தவறா?சரி - திருக்குறளின் வேறு
பெயர்கள்?முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை - திருவள்ளுவர் ஆண்டு
கணக்கிடும் முறை? கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு - தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுபவர்?உ.வே.சாமிநாதய்யர்
- ஆடிப்பெருக்கில் ஆற்றில்
விட்ட பழைய ஓலைச்
சுவடிகளைப் பதிப்பித்தவர்?உ.வே.சாமிநாதய்யர் - தமிழ்த்தாத்தா எந்த
ஊரின் ஆற்றில் விட்ட
ஓலைச் சுவடிகளைத் தேடி
எடுத்தார்? ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி - குறிஞ்சிப் பாட்டில்
எத்தனை பூக்களுடைய பெயர்கள்
உள்ளன?99 - பத்துப்பாட்டு நூல்களுல்
ஒன்று?குறிஞ்சிப் பாட்டு - குறிஞ்சிப் பாட்டின்
ஆசிரியர்?கபிலர் - தமிழகத்தில் ஓலைச்
சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்?
கீழ்த்திசை சுவடிகள் நூலகம்–சென்னை, அரசு ஆவணக் காப்பகம்–சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்–சென்னை,சரஸ்வதி மஹால்–தஞ்சாவூர் - உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்?திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
- உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர்?வேங்கடரத்தினம்
- தமிழ்த்தாத்தாவிற்கு ஆசிரியராக
இருந்தவர்?மீனாட்சி சுந்தரம் பிள்ளை - தமிழ்த்தாத்தாவிற்கு அவருடைய
ஆசிரியர் வைத்த பெயர்?சாமிநாதன் - உ.வே.சா.வின்
விரிவாக்கம்?உத்தமதானபுரம் வேங்கட சுப்பையா மகனான சாமிநாதன் - உ.வே.சா.
எந்த இதழில் தன்
வாழ்க்கை வரலாற்றை தொடராக
எழுதினார்?ஆனந்த விகடன் - உ.வே.சா.
வின் வாழ்க்கை வரலாறு
எந்த பெயரில் நூலாக
வெளிவந்தது?என் சரிதம் - உ.வே.சா.
பதிப்பித்த நூல்கள்? எட்டுத்தொகை-8; பத்துப்பாட்டு-10; சீவக சிந்தாமணி-1; சிலப்பதிகாரம்-1; மணிமேகலை-1; புராணங்கள்-12; உலா-9; கோவை-6; தூது-6; வெண்பா நூல்கள்-13; அந்தாதி-3; பரணி-2; மும்மணிக் கோவை-2; இரட்டைமணிமாலை-2;இதர பிரபந்தங்கள்-4; - உ.வே.சா.
அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஆண்டு அஞ்சல்
தலை வெளியிடப்பட்டது?2006 - தமிழின் முதல்
எழுத்து எது?அ தொடர்ந்து வரும்..