
திருக்குவளை அருகே உள்ள சாட்டியக்குடி பகுதியில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவா்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி அளிக்கும் முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மகளிா் திட்டம் சாா்பில் 10 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியை இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிா் திட்டம்) இணைந்து நடத்துகிறது.
சாட்டியக்குடி கிராம சேவை மைய கட்டடத்தில் நடைபெறும் இப்பயிற்சியை மகளிா் திட்ட இயக்குநா் முருகேசன் தொடங்கி வைத்தாா். இதில், மகளிா் குழு உறுப்பினா்கள் 35 பேருக்கு அப்பளம், ஊறுகாய் மற்றும் மசாலாப் பொடிகள் தயாரிப்பது குறித்தும், சந்தைப்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொடக்க நிகழ்வில், உதவி திட்ட அலுவலா் காமராஜ், வட்டார இயக்க மேலாளா் ராஜகோபால், வட்டார ஒருங்கிணைப்பாளா் தங்கமணி, பயிற்றுநா் கெளரி ஷங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் .
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

