துரித உணவு
தயாரித்தல் குறித்து இலவச
பயிற்சி
இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
துரித
உணவு தயாரித்தல் பயிற்சியில் ஆண், பெண் என
இருபாலரும் பங்கேற்கலாம். ஜூன்
20 முதல் 30ம் தேதி
வரை 10 நாள்களுக்கான பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு சீருடை,
உணவு ஆகியவை இலவசமாக
வழங்கப்படும். பயிற்சி
முடிவில் மத்திய அரசின்
திறன் மேம்பாட்டுச் சான்றிதழ்
வழங்கப்படும்.
கிராமப்
பகுதியைச் சோந்த 18 முதல்
45 வயதுக்கு உள்பட்டோர், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர்,
100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள்,
குடும்ப உறுப்பினா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பமுள்ளவா்கள் கனரா வங்கி
கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம்
மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி
வளாகம், 2ம் தளம்,
கொல்லம்பாளையம், ஈரோடு
என்ற முகவரியில் நேரிலோ
அல்லது 2400338 என்ற தொலைபேசி
எண்ணிலோ தொடா்பு கொண்டு
முன்பதிவு செய்துகொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


