டிஎன்பிஎஸ்சி முதன்மை
தேர்வுக்கு இலவச பயிற்சி
தமிழ்நாடு
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ள அரசு
உதவி குற்றவியல் வழக்கறிஞர் நிலை – 2 பதவிக்கு 2021 டிசம்பர்
6ஆம் தேதி நடைபெற்ற
முதல்நிலைத் தேர்வில் 46 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி
பெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு
– புதுச்சேரி பார் கவுன்சில்,
சைதை துரைசாமியின், “மனிதநேய
இலவச ஐஏஎஸ் பயிற்சியகம்” இணைந்து முதன்மை
தேர்வுக்கு இலவச பயிற்சி
அளிக்க இருக்கின்றன.
வருகிற
பிப்ரவரி 10ஆம் தேதி
நடைபெற இருக்கும் இலவசப்
பயிற்சி வகுப்பில் மாணவர்கள்
கலந்துகொள்ள வரும் 27 முதல்
பிப்ரவரி 8ஆம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம். சென்னை
சி.ஐ.டி.
நகரில் உள்ள ‘மனிதநேய
இலவச ஐஏஎஸ் பயிற்சியகம் அல்லது பார் கவுன்சில்
அலுவலகத்தில் பதிவு
செய்து கொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

