TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி – தூத்துக்குடி
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனைக்
கருதி அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி
வழிகாட்டு மையத்தின் சார்பில்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம்
டிஎன்பிஎஸ்சி குரூப்
4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று
வருகிறது. சனி மற்றும்
ஞாயிறு ஆகிய இரு
தினங்களில் காலை 11 மணி
முதல் மாலை 6 மணி
வரை நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தத்
தேர்வுக்கு படிப்பதற்கான புத்தகங்கள் அனைத்தும் அங்கு உள்ளது.
அதனை
காலை 10 மணி முதல்
மாலை 6 மணி வரை
எடுத்து படித்துக் கொள்ளலாம்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில் நெறி வழிகாட்டு
மையம் உதவி இயக்குனர்
வெளியிட்டுள்ளார்.