TAMIL MIXER
EDUCATION.ன் SSC செய்திகள்
மத்திய பணியாளர் தேர்வாணையம் காலிப்பணிகளுக்கு
இலவசப்
பயிற்சி
வகுப்புகள் – விழுப்புரம்
விழுப்புரம்
கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:
மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால்
12,523 காலிப்பணியிடங்களுக்கான
தேர்வு
அறிவிப்பாணை
வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க
வரும்
17ம்
தேதி
கடைசி
தேதியாகும்.
இத்தேர்விற்கான
கல்வித்தகுதி,
பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி
ஆகும்.
1.1.2023 அன்றைய
நிலையில்
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 30 வயதிற்குள்ளும்
இதர
பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்
28 வயதிற்குள்ளும்,
பொது
பிரிவினர்
25 வயதிற்குள்ளும்
இருக்க
வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினர்
மற்றும்
மாற்றுத்திறனாளிகளுக்கு
நடைமுறை
விதிகளின்படி
வயது
வரம்பில்
சலுகை
வழங்கப்பட்டுள்ளது.
தேர்வுக்
கட்டணம்
100 ரூபாய்.
இதில், பெண்கள், எஸ்.சி.,-எஸ்.டி., வகுப்பினர், மாற்றுத்திறனாளிகளுக்கு
விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வினை தமிழ் மொழியிலும் எழுத மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அனுமதித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கும்
வகையில்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
சேவை
மையம்
அமைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு
விண்ணப்பித்தவர்களுக்கு
1.2.2023 அன்று
காலை
10.00 மணியளவில்
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
துவங்கப்பட
உள்ளன.
இது
தொடர்பான
விவரங்களுக்கு
04146 226417
என்ற
தொலைபேசி
எண்ணில்
அல்லது
9499055906
என்ற
மொபைல்
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.