வரும் 4ம்
தேதி முதல் தமிழக
அரசு சார்பில் எஸ்.ஐ.தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு
எஸ்.ஐ.தேர்விற்கான நேரடி மற்றும் ஆன்லைன்
வகுப்புகள் 4 முதல் தொடங்க
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்
கீழ் கிண்டியில் இயங்கி
வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வு
வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் உதவி ஆய்வளார் (SI) தேர்வுகளுக்கான நேரடி மற்றும் இணையவழி
பயிற்சி வகுப்புகள் 04.04.2022 முதல்
நடைபெற உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள
விருப்பம் உள்ளவர்கள் https://t.me/+R_zTdZDQLWc4NGI1 என்ற
Telegram இணைப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Click Here to Join Telegram Group
எனவே,
உதவி ஆய்வாளர் போட்டித்
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்
இப்பயிற்சி வகுப்பில் நேரடியாகவோ அல்லது இணைய வாயிலாகவோ
கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில் நெறி
வழிகாட்டும் மையத்தின் முதன்மை
செயல் அலுவலர் மற்றும்
வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறை இயக்குநர்
தெரிவித்துள்ளார்.