போட்டித்தேர்வுகளுக்கான இலவச
பயிற்சி முகாம்
கரூர்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டு மையம்
சார்பில் அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் கலந்து
கொள்ள மாணவர்களுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் இன்று
முதல் தொடங்கப்பட உள்ளதாக
மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
போட்டித் தேர்வுகளில் வெற்றி
பெற்று அரசு பணிகளில்
சேர விரும்பும் மாணவர்களுக்கு அரசு சார்பில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதன்படி
போட்டித்தேர்வுகளுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் இன்று
முதல் கரூர் மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டு மையம்
சார்பில் நடத்தப்பட உள்ளதாக
கரூர் மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே
கொரோனா காலத்தில் ஆன்லைன்
மூலமாக இந்த வகுப்புகள் நடத்தப்பட்டுள்ள நிலையில்
தற்போது நேரடியாக நடத்தப்பட
உள்ளன. இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள்
வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.