பழங்குடியினருக்கு இலவச
தையல் பயிற்சி – காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தோடா, கோத்தா,
குரும்பாஸ், இருளர், பனியர்
மற்றும் காட்டுநாயக்கன் ஆகிய
பழங்குடியின மக்களின் வாழ்வாதார
முன்னேற்றத்திற்காக 50 நபர்களுக்கு இலவச தையற்பயிற்சி வழங்க
அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,
கே.எஸ்.எம்.
டிரஸ்ட் நிறுவனம் மூலம்
50 நாட்கள் இலவச தையற்
பயிற்சிக்கான ஏற்பாடுகள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியிர் நல
அலுவலகம் மற்றும் கே.எஸ்.எம்.
டிரஸ்ட் மூலம் செய்யப்பட்டுள்ளது.
இந்த
பயிற்சியில் கலந்து கொள்ள
விருப்பமுள்ள பழங்குடியின பிரிவினர், கண்காணிப்பாளர் – 73388 01317 மற்றும்
கே.எஸ்.எம்
டிரஸ்ட் – 70107 39120 ஆகியோரின்
செல்போன் எண்களில் தொடர்புகொண்டு தங்கள் பெயர்களை முன்பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
மேலும் பயிற்சியின் முதல்
நாளன்று சாதிச்சான்றிதழ் மற்றும்
ஆதார் கார்டு நகலினை
பயிற்சி பொறுப்பாளரிடம் நேரில்
ஒப்படைக்க வேண்டும் என்றும்
பழங்குடியின மக்கள் இலவச
தையற் பயிற்சியில் கலந்துகொண்டு பயனடையலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


