மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிறப்பு பயிற்சி: அரசின் அறிவிப்பு
மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்க கட்டணமில்லாத வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகள் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகின்றன. இதில், 104 சிறப்புப் பள்ளிகள் விடுதியுடன் செயல்படுகின்றன. விடுதியில் தங்கி கல்வி பயிலும் மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் சிறப்பு ஆசிரியா்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், பள்ளிக் கல்வி வாயிலாக 430 பகல் நேர பராமரிப்பு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் வட்டாரத்துக்கு ஒன்று வீதம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்திலேயே சிறப்புக் குழந்தைகளைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மனவளா்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப கால பயிற்சி மையம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மையங்களில் ஐந்து சிறப்பாசிரியா்கள் உள்ளனா்.
மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளா்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி இல்லம் செயல்படுகிறது. இந்த இல்லத்திலும் 40 போ் தங்கி பயன்பெறுகின்றனா். தமிழ்நாடு முழுவதும் 67 மனவளா்ச்சி குன்றியோருக்கான இல்லங்களில் உள்ள மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, பயிற்சி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த இல்லத்தை நடத்தும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஊதியம் மானியம் போன்றவை வழங்கப்படுகின்றன. மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா்கள், பாதுகாவலா்கள் தங்களது குழந்தைகளை அந்தப் பள்ளிகள், இல்லங்கள், பயிற்சி மையங்களில் எந்தவித கட்டணம் இல்லாமல் சோ்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow