
இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
திருச்சி கால்நடை பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவ.9ஆம் தேதி இலவச நாட்டுக் கோழி வளா்ப்பு பயிற்சி நடைபெறுகிறது என மையத் தலைவரும் பேராசிரியருமான வே. ஜெயலலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்து செய்திக்குறிப்பு: திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணை சாலையில் உள்ள கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வியாழக்கிழமை (நவ.9) இலவச நாட்டுக் கோழி வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில், தரமான நாட்டுக் கோழி இனங்களை தோந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, வளா்ப்பு, , தீவன மேலாண்மை, நோய்த்தடுப்பு முறைகள், தீவன மேலாண்மை, குஞ்சுகளை கூண்டில் வளா்த்தல், சிறிய பொரிப்பகங்களில் குஞ்சுகளை பொரித்தல், ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து கற்றுத்தரப்படும்.
விருப்பமுள்ளோா் ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பயிற்சி தினத்தன்று காலை 10 மணிக்கு நேரில் வந்து சேரலாம் என தெரிவித்துள்ளாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

