புதுச்சேரியில் பிப்.7
தியாகராஜர் ஆராதனை இசை
வைபவத்தில் இலவசமாக பங்கேற்கலாம்
புதுச்சேரியில் பிப்.7 தியாகராஜர் ஆராதனை
நிகழ்வு நடக்கிறது. பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி
யுடன் நாள் முழுவதும்
இசை நிகழ்வுகள் நடைபெறுகிறது.
புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி,
புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழகம், தேசிய கலை மையம்
மற்றும் அயன் ஃபைன்
ஆர்ட்ஸ் அகாடமி ஆகியவை
இணைந்து புதுச்சேரியில் தியாகராஜரின் ஆராதனையை பிப்.7 இசை
வைபவமாக நடத்துகிறது.
இந்நிகழ்வு லாஸ்பேட்டை இசிஆர் சாலை
விவேகானந்தா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வை பத்மபூஷன் டாக்டர் டி.வி.
கோபாலகிருஷ்ணன் காலை
8.30 மணிக்கு குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். பின்
காலை 9 மணி முதல்10.15
வரை பஞ்சரத்ன கீர்த்தனை
களும் தொடர்ந்து காலை
10.15 முதல் மாலை 5 மணிவரை
தனிக் கலைஞர்களின் இசை
கச்சேரியும் நடைபெறும். மாலை
5 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு
பெறும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


