இந்தியன் வங்கி
ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி
மூலம் இலவச காளான்
வளர்ப்பு பயிற்சி
தருமபுரியில் இந்தியன்
வங்கி சுய வேலை
வாய்ப்பு பயிற்சி நிறுவனம்
மூலம் காளான் வளர்ப்பு
இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட
45 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த
பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.
பயிற்சிக் காலத்தின்போது தேவையான உபகரணங்கள், காலை,
மாலை தேநீர் மற்றும்
மதிய உணவும் பயிற்சி
மைய ஏற்பாட்டில் இலவசமாகவே
வழங்கப்படும்.
பயிற்சியின் முடிவில்
அரசு அங்கீகாரம் பெற்ற
சான்றிதழும் வழங்கப்படும். வறுமைக்
கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பயிற்சியில் சேர முன்னுரிமை அளிக்கப்படும்.
பயிற்சியில் சேர
விரும்புவோர் ஆதார்,
குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல், புகைப்படம், மாற்றுச்
சான்றிதழ் ஆகியவற்றுடன் அணுக
வேண்டும்.
வகுப்பு
நேரம்:
காலை 9.30 மணி முதல்
மாலை 5.30 மணி வரை
பிப்ரவரி 1ம்
தேதி தொடங்கி 10 நாட்கள்
இப்பயிற்சி நடக்க உள்ளது.
முகவரி:
இயக்குனர்,
இந்தியன்
வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்,
காதி
பில்டிங் கலெக்டர் அலுவலக
வளாகம்,
கட்டுமான
தொழிற்சங்கம் அருகில்,
தருமபுரி
– 636 705.
மேலும்
விபரங்களுக்கு:
04342-230511, 234464
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


