விவசாயிகளுக்கு இலவச
ஆடு வளர்ப்பு பயிற்சி
கரூர்
மாவட்டம் மண்மங்கலம் அருகே
பண்டிதகாரன்புதூரில் உள்ள
கால்நடை பல்கலைக்கழக பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மைய
வளாகத்தில் வெள்ளாடு மற்றும்
செம்மறி ஆடு வளர்ப்பு
என்ற தலைப்பில் வரும்
29ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று ஒரு நாள்
இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் ஆடுகளுக்கு கொட்டகை அமைப்பு,
ஆடுகளை தேர்வு செய்தல்,
தீவன பராமரிப்பு, ஆடுகளைத்
தாக்கும் நோய்கள் மற்றும்
அவற்றை தடுக்கும் முறைகள்
ஆகிய தலைப்புகளில் பயிற்சி
வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக 29ம்தேதி காலை
10.30 மணிக்குள் வந்து பயிற்சியில் பங்கு கொள்ளுமாறு மையத்தின்
பேராசிரியர் மற்றும் தலைவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.