TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
பொங்கல் பண்டிகைக்குள்
50,000 விவசாயிகளுக்கு
இலவச
மின்
இணைப்பு
தமிழகத்தில் விவசாயிகளுக்கென
பல்வேறு
வகையான
நலத்திட்டங்களை
அரசு
அறிமுகப்படுத்தி
வருகிறது.
அந்த
வகையில்
விவசாயிகளுக்கு
பயன்படும்
வகையில்
இலவசமாக
மின்
இணைப்பு
வழங்கப்பட்டு
வருகிறது.
மேலும் தற்போது இலவச மின்சார மானியத்தை தொடர்ந்து பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.
மேலும் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையெனில்
உடனடியாக
இணைக்க
வேண்டும்
என
மின்சாரத்துறை
அமைச்சர்
செந்தில்
பாலாஜி
தெரிவித்தார்.
அத்துடன்
இவர்
சென்னையில்
இலவச
மின்
இணைப்பு
செயல்பாடுகள்
குறித்த
ஆய்வு
கூட்டத்தில்
கலந்து
கொண்டார்.
இந்த கூட்டத்திற்கு
பிறகு
இவர்
தெரிவித்துள்ளதாவது,
கடந்த
மாதம்
50,000 விவசாயிகளுக்கு
இலவச
மின்
இணைப்பு
வழங்கப்படும்
என
தெரிவிக்கப்பட்டது.
இதில், 34,134 விவசாயிகளுக்கு
இலவச
மின்
இணைப்பு
வழங்கப்பட்டுள்ளதாகவும்
மீதமுள்ள
15,866 விவசாயிகளுக்கு
பொங்கல்
பண்டிகைக்குள்
மின்
இணைப்பு
வழங்கப்படும்
என்றும்
தகவல்
தெரிவித்துள்ளார்.
அதன்படி பொங்கல் பண்டிகைக்குள்
50,000 விவசாயிகளுக்கு
இலவச
மின்
இணைப்பு
கிடைத்துவிடும்
என்று
கூறப்படுகிறது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


