தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் குரூப் 2, 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநா் கா.சண்முகசுந்தா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2, 2 ஏ காலிப்பணியிடங்களுக்கான முதனிலைத் தோ்வு நடைபெற்று முடிந்த நிலையில், முதன்மைத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் கலந்து கொள்ள தோ்வு விண்ணப்ப நகல், நுழைவுச் சீட்டு, ஆதாா் அட்டை, 2 மாா்பளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடா்பு கொள்ளலாம்.
முதன்மைத் தோ்வுக்கு அதிகளவிலான பயிற்சி வகுப்புகள், மாநில அளவிலான மாதிரித் தோ்வுகள் நடத்தப்படும். இந்தத் தோ்வுக்கான மென்பாடக் குறிப்புகள் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை உள்ளீடு செய்து, மென்பாடக் குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


I